பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

என் பார்வையில் கலைஞர்



கலைஞரை, அவரது அரசியல் எதிரிகள் பழைய கணக்கை வைத்தே அளக்கிறார்கள். இது தவறானது. ஆரம்பத்தில் தவறாக கருதப்படுகிறவர்கள், இறுதிக் கட்டத்தில் போற்றுதலுக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.

எடுத்துக் காட்டாக, குன்றக்குடியில் ஆரம்பக் கட்டத்தில் மக்களால் ஓரளவு ஒதுக்கப்பட்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார் இறுதிக் கட்டத்தில் அந்த மக்களுக்கு உள்ளூர் கடவுளாகி விட்டார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, டில்லியில் வழக்கறிஞர்களை அடித்துத் துரத்திய குற்றத்தின் பேரில் தண்ணியில்லா காட்டிற்கு அனுப்பபட்ட கிரேன்பேடிதான் இன்று நாடு போற்றும் காவலராக திகழ்கிறார். கேரள கடலோர கிராமத்தில் பெரும்பாலான மக்களின் ஏச்சுக்கும், எள்ளலுக்கும் உள்ளான ஒரு மீனவப் பெண்தான், இன்று உலகம் போற்றும் மாதா அமிர்தாயியாக மாறியிருக்கிறார்.

ஒருவரை அவரது இறுதிப் பரிணாம வளர்ச்சியை வைத்துத்தான் அளக்க வேண்டும். எல்லோருக்கும் இப்படிப்பட்ட அளவுகோலை வைப்பவர்கள் கலைஞர் என்று வந்துவிட்டால் ஏனோ அந்த அளவுகோலை ஒடித்துப் போடுகிறார்கள். இது விசித்திரமாகவும் இருக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது.

கலைஞர் மகத்தான் இலக்கியவாதி. வைரஸ் ஊடுருவ முடியாத கணிப்பொறி மூளைக்காரர். ஆனாலும், தான் சந்திக்கும் ஒருவரிடம் அவருடைய அளவிற்கு இறங்குகிறார். என்னிடம் அவர் உரையாடுவதைப் பார்த்தால், அந்தக் கணத்தில் அவர் முதல்வர் என்பது மறந்து போகும். அபிராமியைப் பற்றி அந்தப் பெயருக்குரிய பட்டர் குறிப்பிடுவாரே என் அறிவளவானது அதிசயமே என்று. அப்படி கலைஞரும் ஒருவரின் அறிவளவிற்கு அதிசயமாய் தன்னை ஆக்கிக் கொள்கிறார்.

இலக்கியவாதி என்று வரும்போது அரசியல் மேல்தளத்தில் இருந்து குதித்து நம்மோடு சமதளத்தில் நிற்கிறார். இவரது தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் - போன்ற படைப்புகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின், இலக்கியவாதிகள் மேலோங்க, மேலோங்க மேலோங்கும் என்பது எதிர்கால இலக்கிய வரலாற்று உண்மை.

தமிழகத்தில் கலைஞரைப் போல் வேறு எந்தத் தலைவரும் இழிவாகவும், கேவலமாகவும் விமர்சிக்கப்பட வில்லை . இவருக்கு