பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

என் பார்வையில் கலைஞர்


பொறுப்பேற்கும்போது அவர் சொந்த வீட்டில் இருக்க விரும்பினால் அரசு செலவில் அந்த வீட்டை புதுப்பித்துக் கொள்ளலாம். முதல்வர் என்றால் கேட்க வேண்டியது இல்லை.

ஆனால், கலைஞரின் வீட்டு முன்பு ஒரு பெரியதொரு வளைந்த கொட்டகை முக்கோண வடிவத்தில் போடப்பட்டு இருந்தது. வாசலுக்கு முன்னால் இடது பக்கத்தில் பொது மக்களுக்காக பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. இதுதான் முதல்வர் கலைஞர் தனது வீட்டை புதுப்பித்துக் கொண்ட வகை என்று கருதுகிறேன். மற்றபடி அவரது வீடு பின்னைப் புதுமைக்கு புதுமையாகாமல், முன்னை பழமைக்கு பழமையாகவே தோன்றியது.

கலைஞரைப் பார்க்கப்போகிறோம், பேசப் போகிறோம் என்ற பரபரப்போடும், பரவசத்தோடும், கூடவே படபடப்போடும் கலைஞரின் வரவேற்பு அறைக்குள் நுழைகிறேன். வீட்டுக்கு முன்னால் நின்ற காவலர்களுக்கும், வாசல்பக்கம் நின்ற காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் என்னை நன்றாகவே தெரிந்திருக்கிறது. புருவச் சுழிப்போடு என்னை உள்ளே விட்டார்கள். செவ்வக வடிவத்திலான வரவேற்பறை... மாடிப்படிகளுக்கு வழிவிட்டது போல் ஒதுக்கமாக இருந்த வெளி, பிளைவுட் பலகைகளால் தடுக்கப்பட்டு திடீர் அறையாக்கப் பட்டிருந்தது. அந்த அறைக்குள் எனது இனிய நண்பரும், முதல்வர் அலுவலகத்தின் இணைச் செயலாளருமான சண்முகநாதன் அவர்கள் தட்டச்சில் எதையோ அடித்துக் கொண்டிருந்தார். ஒருவேளை நம்பகமான கடிதமாக இருக்கும். அதை நான் பார்க்கவும் கூடாது. அதே சமயத்தில் அவரிடம் பேசவும் வேண்டும். ஆகையால், தலையை மட்டும் ஒரு கோணத்தில் தூக்கி வைத்துக் கொண்டு ‘வந்து விட்டேன்’ என்பதற்கு அடையாளமாக அவருக்கு ஒரு சல்யூட் அடித்தேன். அவரும் கருமமே கண்ணாக இருந்ததால் என்னை மெல்லத் திரும்பிப் பார்த்து தலையை மென்மையாக ஆட்டினார். அது மேகம் ஆகாயத்திலிருந்து கீழே குவிவது போல் எனக்குத் தோன்றியது.

இந்த சண்முகநாதன் கலைஞருக்கு ராம பக்த அனுமான் மாதிரி. கலைஞரின் மனமே இவர் மனம். பொதுவாக, கலைஞர் ஒருவர் மீது என்ன அனுமானம் வைத்திருக்கிறார் என்பதை