பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய தலை முறை எழுத்தாளர்களில் சிலர், தமிழில் புதுமையாக, பிரமாதமாக, எதுவும் சாதிக்கப்படவில்லை : நாம் தான் புதுமைப் படைப்புகளை ஆக்க வேண்டும் ; ஆக்குவோம் என்று பேசுவதும் எழுதுவதும் இயல்பாக இருக்கிறது.

   இது சரியான, நேரிய, கண்ளுேட்டம் ஆகாது. தமிழில் இதற்கு முன் செய்யப்பட்டிருப்பனவற்றை இவர்கள் அதித்து கொள்வது நல்லது. அப்படித் தெரிந்து கொண்டால் தான், மேலும் புதுமையாக, புதிய தமிழ் வளர்ச்சிக்கு வளம் ஊட்டும் விதத்தில், என்ன செய்ய முடியும்என்னென்ன செய்ய வேண்டும் - என இவர்கள் புரிந்து கொள்ளுதல் கூடும்,
   இரண்டாயிரம் வருட வரலாற்றுப் பெருமை உடையது தமிழ் இலக்கியம் என்று கூறப்படுகிறது. புதிதாக எழுத விரும்புகிறவர்கள், அந்த இலக்கியப் பெருமை தான் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல முறையில் வளரக் கூடிய இன்றைய எழுத்தாளர்களுக்கு பழத்தமிழ் இலக்கிய அறிமுகமும் தேவை தான். -
  தற்காலத்தில், படிக்க விரும்புகிற ரசிகர்களுக்கு வசதியாக நூல் நிலையங்கள் இருக்கின்றன. கூடுமானவரை பல தரப்பட்ட புத்தகங்களும் நூலகங்களில் கிடைக்கத் தான் செய்கின்றன.
  வளர்ச்சி பெறுவதில் நாட்டமுடைய எழுத்தாளர்கள் தமிழ் மொழி இலக்கிய வளர்ச்சியைப் புரிந்து கொள்ள முயல்வதுடன், இதர இந்திய மொழிகளின் இலக்கியப் படைப்புகளை அறிமுகம் செய்து கொள்வதும் நல்லது.