பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

த. கோவேந்தன்



35. தேவகியின் ஏக்கம்


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்ந்தவன் கண்ணன்.

பெற்றவள் தேவகி. வளர்த்தவள் யசோதை. கண்ணபிரானுடைய குழந்தை விளையாட்டையும் குறும்புத் தளத்தையும் கண்டு களிக்கும் பேறு தேவகிக்குக் கிட்டவில்லை. அந்தப் பெரும் பேறு பெற்றவள் யசோதை.

“மருவும் நின்திரு நெற்றியில் கட்டி

    அசைதர மணிவாயிடை முத்தம்

தருதலும் உன்தன் தாதையைப் போலும்

    வடிவு கண்டுகொண்டு உள்ளம்உள் குளிர

விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து

    வெகுளியாய் நின்று உரைக்கும்அவ் வுரையும்

திருவி லேன்ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்

    தெய்வ நங்கை யசோதைபெற்றாளே!


முழுவதும் வெண்ணெய் அளைந்து தொட் டுண்ணும்

    முகிழ் இளஞ்சிறு தாமரைக் கையும்

எழில்கொள் தாம்புகொண்டு அடிப்பதற்கு எள்கு

    நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்

அழுகையும்அஞ்சி நோக்கும் அந் நோக்கும்

    அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும்

தொழுகையும் இவை கண்ட யசோதை

    தொல்லை இன்பத்து இறுதிகண் டாளே”


என்று ஏங்கினாள் தேவகி