பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

33



திடீரென்று நெருப்பு அணைந்து விட்டது. அந்த நெருப்பினால், சேரிக்கு எவ்விதச் சேதமும் நேரவில்லை.

மகளைக் காண ஒடிய துரோனர். சேதாவின் வீட்டில் இறைவன் முன், சேவாவுடன் அவள் இருப்பதைக் கண்டார். கீழ்க்குலச் சேரி என்ற எண்ணம் தகர்ந்தது. சேரி வீட்டில் - சேதா வீட்டில் - நுழைந்தார். அங்குக் குடி கொண்டிருந்த இறைவன் முன் விழுந்து வணங்கினார்.

“பக்த சேதா அவர்களே! தங்கள் பெருமை அறியாமல், சாதி வெறியால் நீதி தவறிப் பல தீங்குகளை உமக்குச் செய்து விட்டேன். அதற்காக என்னை மன்னிக்க வேண்டும்” என்று சேதாவின் திருவடிகளிலும் விழுந்து வணங்கினார் துரோணர்.

பின்பு தம் மகள் சந்தரவைத் தழுவிக் கொண்டு, “மகளே! சாதி வெறித் திரை மூடியிருந்த என் கண்களைத் திறந்துவிட்ட தெய்வம் நீ! என் அகந்தையை நொறுக்க வந்த சம்மட்டி நீ! இனி இத்தகைய செயல்களில் ஈடுபடமாட்டேன்” என்று குரல் தழுதழுக்கக் கண்ணீர் சொரிந்து தன் செயலுக்குக் கழுவாய் தேடலானார்.