மகாபாரதக் கதைகள்
81
தீராத விளையாட்டுப் பிள்ளையாகிய கண்ணனுடைய திருவருட் செயல் ஒவ்வொன்றும் அற்புதமானது அறிவுக்கு எட்டாதது ஆனால், முடிவில் நல்லோர்க்கு நலமும் தீயோர்க்குத் தீமையும் பயப்பது
இங்குக் காணப்போகும் வரலாறும் அத்தகையதே இது காவியங்களில் இடம் பெறாத வரலாறு ஆனால் நாட்டுப்புறக் கதையும் அன்று பெருஞானியாகிய பெரியாழ்வார் தம் பேரருட் சிந்தனையில் உருவான கற்பனை சிறு விதையாக உள்ள கற்பனையைச் சிறு மரமாக்கி இன்பக்கனி நுகர்வோம்! வாருங்கள்
ஆருயிர் நண்பன் அட்டூழியம் செய்கின்றான். அன்பின் காரணமாக அவனை அடக்க மறுக்கின்றான் அச்சுதன் ஆயர்கள், கண்ணனின் விநோதப் போக்கினால் கலங்குகின்றனர் முடிவு கண்ணனின் நட்பும் களங்கமுறவில்லை கண்ணனாலேயே அவன் நண்பனும் அழிகின்றான் அதிசயமாக அல்லவா உள்ளது அதிசயம் ஆனால் முடிவு அதுதான்
“சீமா லிகன் அவனோடு
தோழமை கொள்ளவும் வல்லாய்!
ஆமாறு அவனைநீ எண்ணிச்
சக்கரத் தால்தலை கொண்டாய்!”
என்பதே பெரியாழ்வார் தூவியவிதை! அவ்விதையில் மரபு வழுவாமல் கற்பனைப் புனல் பாயந்து களிக்க கனிதரும் நாடக மரமாக வளர்ந்துள்ளது.