84
த. கோவேந்தன்
இடம் :யமுனையின் மறுகரை காலம்: மாலை பாத்திரங்கள் : கண்ணன். ஆயர் சிறுவர்சிலர். சீமாலிகன்.
ஒரு சிறுவன்: கண்ணா! வெகுநேரம் ஆகிவிட்து. வாருங்கள் மாடுகளை மடக்கிக் கொண்டு வீட்டுக்குப் போவோம்.
மற்றொருவன்: : ஐயோ! என் மாடுகள் வெகுதூரம் போய்விட்டனவே! நான் போய் அவற்றை ஒன்று சேர்த்து வருவதற்குள் இருட்டிப்போகுமே!
வேறொருவன்: கண்ணா! என் மாடுகள் கூடத் தொலைவில் தான் மேய்கின்றன. விளையாடிக் கொண்டே மாடுகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமே! ஆகையால், கண்ணா நீதான் அவற்றை ஒன்று சேர்க்க வேண்டும்!
மற்றொருவன்: ஆமாம்! கண்ணா! நேரம் கழித்துச் சென்றால் என் தந்தை சினம் கொள்வார். ஆகையால், மாடுகளை விரைவில் ஒன்று சேர்த்துக் கொடு.
கண்ணன்: தோழர்களே! பயப்பட வேண்டா. இதோ! உங்கள் மாடுகள் வந்துவிடும். (குழலூதுகின்றான்) (மாடுகள் எல்லாம் குழலோசை கேட்டுக் குதித்தோடி வருகின்றன. இடைச்சிறுவர் மகிழ்கின்றனர்.
ஒருவன்: கண்ணா! மாடுகள் வந்துவிட்டன. புறப்படுவோமா!
இன்னொருவன்: சரி சரி! வாருங்கள் போவோம்.