மகாபாரதக் கதைகள்
91
இடம் : ஒரு சோலை காலம் : மாலை பாத்திரங்கள் : நாரதர், சீமாலிகன்
(சீமாலிகன் ஒரு மேடையில் அமர்ந்துள்ளான். நாரதர் வருகின்றார்)
சீமாலிகன்: (அலட்சியமாய்) யாரது? நாடோடி நாரதரா?
நாரதர்: சீமாலிகா! நலமா!
சீமாலிகன்: நலத்திற்கு என்ன குறை? கண்ணனை நண்பனாகப் பெற்ற பின், கவலையும் உண்டோ?
நாரதர்: சீமாலிகா! கண்ணன் ஒரு கபடக்காரன் அவனை முற்றிலும் நம்பிவிடாதே!
சீமாலிகன்: நாரதரே! நாவை அடக்கிப் பேசுங்கள். சீமாலிகன் எதிரில், கண்ணனைப் பழித்துப் பேசலாகாது.
நாரதர்: உண்மை கசக்கத்தான் செய்யும் நீயாகவே தெரிந்து கொள்வாய்! (சற்றுப் பொறுத்து) சரி, சீமாலிகா! கண்ணன் உனக்கு எல்லா வித்தைகளும் கற்றுத் தந்து விட்டானா?
சீமாலிகன்: நூற்றுக்கு நூறு கற்றுக்கொண்டு விட்டேன்.
நாாதர்: சீமாலிகா! நீ ஏமாந்து போனாய்? முற்றும் கற்றுத் தந்துவிட்டதாக உன்னை நம்ப வைத்துள்ளான். இது ஒன்றே போதாதா அவன் கபட நாடகக்காரன் என்பதற்கு?
சீமாலிகன்: நாரதரே! நீங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லையே! என் மனம் அறியக் கண்ணன் ஒன்றும் மறைக்கவில்லை. மறைக்கவும் மாட்டான்.