இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16
உங்கள் பெரும்புலமை உலகத்துக்கு உரிமை
ஒரு சிற்றூரில் தேங்குவதற்கு ஒப்பேன்.”
கம்பர்
“தங்கள் பேரவைக்கு கூத்தர் இருக்கின்றார்’
அவரிலும் வலிய புலமை எனக்கில்லை.”
சோழன்
அவர்புலமைகற்றது, கேட்டது, ஆய்ந்தது.
கம்பனுக்குக் கை வந்தது காளியின் திருவருள்.
கம்பர்
“ஆயிரம் சொல்லினும் என் ஆத்தாளை
நான் பிரியேன்.”
சோழன்
“வள்ளலே என் விருப்பத்தை நிறைவேற்றிக்
கொடுங்கள்.”
வள்ளல்
தங்கள் மனம் போல ஒரு நாள் வரும்
அன்னையே மகனை அனுப்பி வைப்பாள்
சோழன்
வால்மீகியின் காலத்தில் நான் பிறக்கவில்லை
என்ற குறை தீர்ந்ததென்று நினைத்தேன் தீரவில்லை
வள்ளல்
பொன்னி மன்னனே புரியவில்லை- சொல்லுங்கள்