பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

குலோத்துங்கன் இருந்திருந்தால் சோழனின் தகுதிக்கு
பதினாயிரம் படகில் அரிசிசென்றிருக்கும்
பாட்டன் அருள் மொழி குடியமர்த்திய பரம்பரையை
பகைவனுக்கு நண்பன் பராக்கிரமன் என்பதால்
சோழன் பட்டினி போட்டிருக்க மாட்டான்
சடையரை பாராட்டினேன் ஏர் எழுபதாக

“உழுங் குலத்தில் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தார்”
“ஏரடிக்கும் சிறுகோலே செங்கோலை நடத்துங்கோல்”
“வேந்தர் களத்தில் வெல்வதுண்டு தோற்பதுண்டு”
“உழவர் களத்தில் இரப்பவரும் தோற்பதில்லை”

என்று தொடர்ந்த ஏர் எழுபதின் கருத்துரைக்கு
வேந்தன் வியந்தான். சடையனை வாழ்த்தினான்
கம்பன் திறமையை கூத்தனும் மெச்சினான்

சோழன்

இராமகதை எதுவரை வளர்ந்திருக்கிறது

சுவைப்பதற்கு ஒரு கவிதை சொல்லுக என்றான்