பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

கம்பர்
“குமுதன் இட்ட குலவரை கூத்தரில்
நிமிதம் இட்டுத் திரியும் திரைகடல்
துமிதம் ஊர் புக வானவர் துள்ளினர்
அமுதம் இன்னும் எழும் எனும் ஆசையால்.”

என்று பாடினர் வேந்தன் ரசித்தான்

குணவீரர்
பாற் கடலை கடைந்த பழங் கதைக்கு
புதிய மெருகு இந்தகருத்தோவியம்.
கடலமுதை கண்டவர் வானவர் தானவர்
கம்பன் சொல்லமுதில் இன்று நாம் திளைத்தோம்

கூத்தர்
கரும்பின் சுவைக்குக் கணுவும் தடைஎன்பார்
கம்பன் பாட்டில் சுவையுண்டு ஆயினும் துமி
என்றபதம் எந்த நிகண்டில் உள்ளதோ

கம்பர்
நிகண்டுகளும் புலவர்களின் வார்த்தைத் தொகுப்பே
வழக்கில் இருப்பதை எடுத்தாள்வது தவறோ

கூத்தர்
வழக்கென்பது வடக்கிலா தெற்கிலா எங்கோ

கம்பர்
எழுந்து வாருங்கள் இப்போதே கேட்கலாம்

நடந்தார் கம்பர் தொடர்ந்தான் சோழன்
கூத்தர் குணவீரர் நல்லூர்ச் சடையன்