பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


கம்பன் எழுத்தின் சித்திரம் அவளே
வணங்குவனோ? வாழ்த்துவனோ? வாழி! மாகாளி!
சிந்தனை அணுவெல்லாம் தேவியின் உணர்வாக
செயலிழந்தான் தனையிழந்தான் தேரழுந்தூரான்.
சடையப்ப வள்ளல் அடிக்கடி வருவார்
காவியம் வளர வளர பெருமையில் வளர்வார்
காவிரியின் வெள்ளம் போல் உள்ளம் தளும்புவார்
இலங்கையில் போர் முடித்து இளையவனை அரசாக்கி
கற்பின் நெருப்பைக் கனலில் முழுக்காட்டி
பிரம குலத்து அரக்கர்களின் சாவுக்கு
காவிரியில் ஆடி கங்கையில் ஆடி
ஏழுகடல் ஆடினாலும் பழிதீராதென்று
சேதுக்கரையில் சிவனை நிறுத்தி
வழிபாடு முடித்து வழிநடந்தனர் அயோத்தி
சேதுராமன் ஜெயராமன் ஆனான்
பாதுகாராமன் பட்டாபிராமனானான்
பன்னீராயிரத்து ஒரு பதினாறு பாடல் கொண்டான்.
காளியின் கருணை என்பார் என்க
கம்பனின் திறமை என்பார் என்க
தமிழன்னைக்குத் தலை அலங்காரம் ஆக
கம்பராமன் காவியம் ஆனான்.
குலோத்துங்கன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.

படை நடத்தி பகைவர் மேல் வாகை சூடி