பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

வடபுலத்து வேந்தன் தென்புலத்துக்குத் தேவனோ ஸஎடுத்து எழுத இங்குவேறு தெய்வம் இலையோ
இறக்கு மதிக்கு ஒரு பெரும் காவியப் படைப்போ
புலமைத் திறனுக்குப் பொருள் வேறு கிடைத்திலதோ
கம்பர்
வலிய புலவன் வாணியன் தாதனுக்கு
எடுத்துச் சொல்லும் நிலைமைக்கு இரங்குகின்றேன்
சேரத்து இளங்கோ சிலம்புக்கு ஆசான்
சமணப் புலவன் சாற்றியது மறந்தார்
"மூவுலகும் ஈரடியால் முறை நிறம்பா வகை முடிய
தாவிய சேவடி சேப்ப
தம்பியொடும் காண் போந்து
சோவரனும் போர் மடிய
தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே"
தமிழ்க் கவிகளின் குலத்துக்குப் பாட்டன்
பாடியதற்கும் மேலும் ஒரு விளக்கம் வேண்டுமோ
ஆழ்வார் திரு மொழியும் ராமகதை சொல்லும்
அதற் கென்ன பதில் சொல்வீர் எனக் கேட்டார்