பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

தில்லையிலும் ஒரு கோவிந்தன் இருக்கிறான் என்ற
திடமுடனே கம்பர் தில்லைக்கு நடந்தார்
அரங்கேற்றம் தடைப்பட்ட நாள் முதலாய்
ஆறை நகர் அரண்மனையில் கலகலப்பில்லை
சோர்ந்திருந்த சோழனின் விழிப்புக்கு ஓர் வாய்ப்பு
தெலுங்கச் சோடர்களின் செறுக்கடக்க
திரிபுவன முடையான் போருக்கு நாள் குதித்தான்
புவனமுழுதுடையாள் மகளுக்கு வரன் கேட்டாள்

சோழன் :
தென்னவன் நமக்குத் தோற்றகுடி நிகரில்லை
பல்லவன் பரம்பரை வழியற்றுப் போனது
களப்பிரர் வாழ்விழந்தார் முத்தரைார் நம் ஏவலர்
வாரங்கல் இளவரசன் வயதில் மிகுந்தான்
ஹொய்சளர் உறவென்றால் முடிக்கு உரிமை கேட்பார்
அவளுக்கென்று ஆற்றல் மறவன் பிறந்திருப்பான்
அடையாளம் தெரியும்வரை பொறுத்திடுக என்றான்

அரசி
அம்மங்கை வயதில் நின்றிருக்க மாட்டாள்

போரில் உங்கள் பொழுது கழிந்திடும் பொறுக்வேனக்கே