பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5



எழுத்தாணி விளையாட ஏடு கொள்ளா புராணங்கள்
தத்துவங்களை உள்ளடக்கித் தாளமிட்டன

இத்தனைக்கும் இடையில் பக்தி என்ற படிக்கட்டில்
ஞான விளக்கெடுத்து தவக் கோலூன்றி
இலக்கியச் சோலையிலே கற்பனைத்தோகை விரித்து
களிநடம் புரிந்தான் காவியக் கம்பன்
சரித்திர பின்னணியில் சாத்திர நிழலில்
இலக்கியச் சுவட்டில் ஏகே வேலன் எழுது கிறேன்
கவிகளில் பெரியோன் கம்பனுக்கு மேலில்லை.
நாயகரிற் பெரியோன் ராமனுக்கு மேலில்லை.
எழுத்தில் இனிமை தமிழுக்கு மேலில்லை.
கம்பனின் கழலடிபணிந்து

அவன் கதையைச் சொல்லுகிறேன்.