பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

யாரும் அறியாமல் ஆறைக்கு பறந்தான்
மூடிக் கிடந்தது முன்வாசல் பின்வாசல்
மூடாத விழிமலர்கள் வாடிக் கிடந்தது மேல் மாடத்தில்
பாடித் திரிந்த நிலா பார்த்துச்சிரிக்க
நூலாடத் தெரிந்தவன் நூலேணி கொண்டேறினான்
வலம் வந்த காவற்படை வளைத்து பிடித்தது
காரிகை தன்னைப் பணயம் வைத்தாள்
காலன் சிரித்தானோ காவலர் சிரித்தனர்
கிழக்கு வெளுத்ததோ கேள்விக்குறியானதோ
மன்னவன் கோயில் வாயில் மணி அசைந்ததம்மா
ஆறை நகர் பேரவை நிலை கொள்ளவில்லை
ஒற்றனோ கள்ளனோ உன்மத்தனோ இன்னும்
இருக்கின்றான் மன்னவன் இரக்கத்தினால் என்றனர்
கவலை தீர்ந்திருந்த கம்பரும் வந்தார்
வெண்ணைச்சடையன் வினாக்குறியோடு வந்தான்
கூத்தருக்கோ இனம் புரியாத குழப்பம்
கொதித்த மனத்தோடு குலோத்துங்கன் வந்தான்
படைக்கல மறவரோ பதைத்து நின்றார்

சோழன்
குற்றம் புரிந்தவனை கொன்றிருப்பார் இதுநேரம்

எதிர்காலம் என்னை பழிக்கலாகா தென்பதற்காக