பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


இன்னும் உயிரோடிருக்கிறான் கொண்டு வருக
என்றதும், சபைக்கு பேர் அதிர்ச்சியாக
இளங்கவியை தளையிட்டு இழத்து வந்தார்
தரை கழன்றதோ தலை சுழன்றதோ கம்பர் நிலை இழந்தார்
சோழன்
ஆன்ற பெரியோரே அறம் கூறும் சான்றோரே
ஒரு புறாவுக்காக தன் தசையைக் கொடுத்த
சிபிக் குலத்துச் சோழன் குலோத்துங்கன் கேட்கின்றேன்
கட்டு கடந்து காவல் மீறி
கோட்டைச் சுவரேறி குதித்தவனுக்கு என்ன தண்டனை
நீதி பெரிதென்று தன்னொரு மகனை
தேர்க்காலிலிட்ட மனுக்குலத்து சோழன் கேட்கின்றேன்
அரச கட்டளை அரசியல் தூது
பாதையில் மறந்து வந்தவனுக்கு என்ன தண்டனையோ
பகருவீர் பகருவீர் என்றான் பார்த்திபன்
அவையினிலே அசைவில்லை பேச்சில்லை
கொலைக் களத்தில் தலைவாங்குவதே
முன் மரபென்றான் ஒரு கிழவன்
நேற்றுச் சபையில் ராஜ மரியாதை பெற்றவன்
இன்று குற்றக் கூண்டிலென்றால் குறை என்னவோ
சபையறிய சாற்றுவதே முறை என்றான் துணிந்து

சோழனின் பெருமையை சுட்டெரிக்க வந்தான்