பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்னுரை

இழுக்குடைய பாட்டுக்கு இசைநன்று இலக்கண
வழுக்குடைய பாட்டுக்கு இனிய தமிழ் நன்று
கிழக்கும் அது நின்ற கிழக்கிற்கு மேற்காகும்.
வழக்கியலே இலக்கியமாய் இலக்கணம் வகுப்ப துண்டு.
 
மதங் கொண்ட யானையை அங்குசத்தால் அடிப்பார்
மதங் கொண்ட மானிடத்தை திடங்கொண்டு மிதித்த
கிரேக்கத்துப் பெரியவர் சாக்ரட்டீசிலிருந்து
ஈரோட்டுப் பெரியார் வரை எனக்கினியவரே.

எம்மதமும் சம்மதம் என்பதற்கு மேலாக
தன் மதங் கொண்டு தடுமாறுகின்ற
உன்மத்தர்க்குச் சொல்வேன், உண்மையே நன்மதம்

செம்மையே தெய்வ சம்மதம் எனத்தெளிக.