பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13
தேவி கருமாரி

தென்னவன் மதுரைக்கும்
       முன்னவன் கைலைக்கும்
தென்குமரி எல்லைக்கும்
       தலைவி--அவள்
தேவி எங்கள் கருமாரி
       திருஞான சம்பந்தர்க்கு
பாலும், தில்லை.
       குருஞான சம்பந்தர்க்கு
சோறும் தருவாள்
       தேவி எங்கள் கருமாரி.

அறங்கள் முப்பத்திரண்டும்
       வளர்ப்பாள் அரன் பிச்சை எடுப்பதையும் பொறுப்பாள்
தேவி எங்கள் கருமாரி.
       தொண்டர் உள்ளத்துள்ளும் ஒடுங்குவாள்
அழகே வடிவான செல்வி
       அகோர உத்ரகாளியும் ஆவாள்
தேவி எங்கள் கருமாரி.

       பூத்துச் சிரிப்பாள்
மலர்க் கூட்டமாக
       பொங்கிச் சிதறும்
எரிமலையும் ஆவாள்
       தேவி எங்கள் கருமாரி
பேசுகின்ற மொழியெல்லாம்
       அவளே ஆவாள்
பேசாத ஊமையாக
       கொலுவும் இருப்பாள்

தேவி எங்கள் கருமாரி