பக்கம்:ஐயை.pdf/71

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இரண்டாம் பகுதி ! .

ஒருதனிக் குடிலில் வாழும், ஓவிய நிழல்போல் ஐயை வருதலும் போத லாலும், வாழ்தலென் பெயரைச் செய்தாள்!

புதினிக் குன்றத்தின் புலியூர் முன்னினும்

பொலிவுற் றிருந்தது; மக்களும் பெருகினர்1 முதனினும் குடிசைகள் ஊர்ப்புலம் நிரம்பின;

முளைத்தன வீடுகள்; கடைகளும் தெருக்களும்! கதிர்செய் வயலொடும் வரப்புகள் தோன்றின!

கல்விக் கூடமும் கவினுற வெழுந்தது! எதினினும் இயைபிலா ஐயையின் உள்ளம்முன்

இருந்தது போல இருந்தது தனிமையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/71&oldid=1280318" இலிருந்து மீள்விக்கப்பட்டது