இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
98
பூவை எஸ். ஆறுமுகம்
அந்தத் திருடனின் முகத்தில் விழிக்க மனமின்றி, நான் ஜம்மென்று என் வீட்டை அடைத் தேன். சாப்பிட்டுப் படுத்தேன்.
அன்று என் தந்தை அயலூர் சென்றிருந்தார்.
வீட்டில் நான் மட்டும்தான் காவல்.
என்னிடம் யார் நெருங்க முடியும்?
ஆனால் அதிசயம் போல, நடுச்சாமத்தில்---
அதே கோமாவரம் கருப்பையா முகமூடி கொண்டு என் முன்னே தோன்றி விட்டான்!
அவனைக் கண்டதும் எனக்குப் புதிய பலம் ஊறியது.
அவனை “யார் நீ?” என்று வினவினேன்.
அவன் உள்ளதை உள்ளபடி சொன்னான்.
எனக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது.
“திருடுகிற இந்த ஈனப் பிழைப்பைச் செய்ய உன் மனம் கூசவில்லையாரீ’’
“கூசுகிறது. ஆனால், என் பசிக்கு யார் பதில் சொல்வதாம்??”
“உழைத்துப் புசிப்பது தானே?”
“திருடனுக்கு யார் வேலை கொடுப்பார்கள்?”