பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

107


படங்களிலும் சிறந்ததாக முகுந்தன் வரைந்த படம் அனைவர் கண்களிலும் பட்டது.

முகுந்தன் வரைந்த படத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. அதை அவனிடம் சொல்லத்தான் முகுந்தனைத் தன் அறைக்கு வருமாறு அழைத்தார். தலைமை ஆசிரியர்.

முகுந்தன் தலைமை ஆசிரியரின் முகத்தைப் பார்த்தான். அவர் பார்வை தலைமை ஆசிரியர் கூறியது எந்தப் படத்தை என்று கேள்வி கேட்பது போல் இருந்தது.

“முகுந்தா! ஏன் அப்படிப் பார்க்கிறாய்? நீ ஓவியப் போட்டியில் வரைந்த உன் அம்மாவின் படத்திற்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது” என்றார் தலைமை ஆசிரியர்.

“நான் எழுதிய என் அம்மாவின் படத்திற்கா முதற்பரிசு? அம்மா!...என் மனத்தில் உன்னை நினைத்து எழுதினேன். பரிசு உனக்குத்தான். எனக்கில்லை என்று அவன் வாய் முணுமுணுத்தது.

தலைமை ஆசிரியர் அறையில் இருந்து வகுப் பிற்கு வந்தான். வகுப்பு மாணவர்கள் முகுந்தன் ஓவியப்போட்டியில் முதல் பரிசு பெற்றதற்காக அவனைப் பாராட்டினார்கள்.