பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொடுக்கும் அன்பு!

பாலமுருகன் அந்தப் பங்களாவைத் தலை நிமிர்ந்து நோக்கினான். ஏனோ அவனுக்குப் பயம் உண்டாயிற்று. “இவ்வளவு பெரிய பங்களாவிலே இந்தச் சின்னப் பையனுக்கு எங்கே வேலை கொடுக்கப் போகிறார்கள்’ என்று எண்ணமிட்டான். பிஞ்சு மனம் வேதனை அடைந்தது. உடனே, வந்த வழியே திரும்பிவிட நினைத்தான் அப்போது, நடந்துவந்த வழியில் கேட்ட மேடைப் பேச்சு அவன் மனத்தில் எதிரொலித்தது. மறு கணம், அவனுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது: ஆகவே, பங்களாவின் வெளி வாசலை அடைந்தான் சிறுவன் பாலமுருகன்.

நல்லவேளையாக, அவன் எதிர்பார்த்தபடி, பங்களாவின் வாசலில் நாய்கள் ஜாக்கிரதை, என்னும் எச்சரிக்கை எதுவும் காணப்படவில்லை. பின், நாய்கள் எப்படிக் காணப்படும்? அவனுக்கு மற்றுமோர் அதிசயமும் காத்திருந்தது. பங்களாக்களிலே வழக்கமாகக் காணப்படும் கூர்க்காவும்