பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பூவை எஸ். ஆறுமுகம்


அந்த அழகான வாசகம் எவ்வளவு மெய்யானது என்கிற உண்மை நடப்பை எங்க சின்ன முதலாளி மூலமாகவும் எங்க பெரிய முதலாளி மூலமாகவும் அறிஞ்சிக்கிட்டேனுங்க” என்று அமைதி கனியச் சொன்னான் பாலமுருகன்.

“பலே பாண்டியா! நீ பிழைத்துக்கொள்வாய், காந்தி மகாத்மா பேரிலே நீ வச்சிருக்கிற நம்பிக்கை உன்னை என்றென்றும் வாழவைக்கும் தம்பி” என்று அன்பு மேலிடத் தெரிவித்தார் பெரியசாமி.

கூடத்துச் சுவரில் தெய்வமாகக் காட்சியளித்த அண்ணல் காந்தி அடிகளின் படத்திற்கு ஆனந்தக் கண்ணிருடன் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தான் சிறுவன் பாலமுருகன்.