பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பூவை எஸ். ஆறுமுகம்


லிங்கன், வேலன், கந்தன் ஆகிய மூன்று வீரப்புலிகளும் ஏமாற்றம் சூழ சிலைபோல நின்றனர். பீமன் போலிருக்கும் தங்களை விட்டு, யாரோ பட்டிக்காட்டானுக்கு மெய்க்காப்பாளன் வேலை கிடைத்திருக்கிறதே என்று அதிசயப்பட்டார்கள்; ஆத்திரப்பட்டார்கள்.

“மன்னர்பிரான் அவர்களைக் கண்டு என் நன்றியை எங்கள் குடும்பத்தின் சார்பில் தெரிவிக்க வேண்டும்...” என்று கூட்டத்தை நெரித்துக் கொண்டு ஓடினான் இளைஞன் மாணிக்கம்.

தம்பி, நில்! மன்னனைப் பார்க்க வேண்டுமா? இதோபார்...’ என்று சொல்லிய அந்தக் கிழவன். தன் வேஷத்தைக் கலைத்தான். .

மன்னன் விஜயாலயன் தோன்றினான்! ஆ!” என்றான் வாலிபன்!

தம்பி! அதோ பார், அந்த மூன்று பேரும் பார்க்க பீமன்சூரன் மாதிரி தோன்றுகிறார்கள். உடல் வளர்ந்திருக்கிறது; ஆனால் அவர்களுக்கு உள்ளம் வளரவில்லையே! பாவம்! நான் காலையில் ஆற்றில் அகப்பட்டுக் கொண்ட கிழவனாக நடித்தது கூட வெறும் நாடகம்; என் சோதனையில் அவர்கள் மூவரும் தோற்றார்கள். உதவி கோரிய, போது, ஆபத்துக்கு உதவாமல் 'பூ' என்று அலட்சியமாகப் போய்விட்டார்கள். இப்படிப்பட்டவர்களா என் நாட்டைக் காக்கப் போகிறார்கள்? என்