பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

பூவை எஸ். ஆறுமுகம்



நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் அது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்!

இந்தவரிகளை-அதன் உண்மைப் பொருளை அறிந்துகொள்ள-அதாவது; வெள்ளைக்காரர்கள் அறிந்துகொள்ள உதவியவர்களில் சிவசிதம்பரமும் ஒருவராம். அதவாது, அவரது பாட்டுத் திறத்தினால் தான் வெள்ளையன் வெளியேறவே திட்டமிட்டிருக்க வேண்டும் என்றும் பலர் அவரைப் புகழ்வதும் உண்டு. அப்படிப்பட்ட உணர்ச்சிப் பிழம்பு அவர்!

உழைப்பால் உயர்ந்தவர் சிவசிதம்பரம்.

காந்தியடிகளின் அறமும் நேருஜியின் துணிவும் கைவரப்பெற்றவர். பாரதநாட்டுத் தலைவர்கள் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்த நேரங்களில் எல்லாம் தவறாமல் அவ்வவ்விடங்களுக்குச் சென்று, தலைவர்களையெல்லாம் சந்தித்து அவர்களுடைய அன்பையும் ஆசியையும் பெற்றவர் அவர்.

சுதந்திர விழாக்களுக்கு அவரது பெருநிதி தான் கை கொடுத்துதவியது.

தன்னலம் கருதாப்பணியால் உலகின் கண் உயர்ந்து நின்ற தமிழ்ப் பெருந்தலைவர் காமராஜரை அவ்வூருக்கு வரவழைத்து விழாக் கொண்டாடத் திட்டம் வகுத்திருந்தார். அவர். அப்பொழுதே, தமது பெருமனையின் குடிபுகு விழாவையும் நடத்திவிட