பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகாத்மாவும் திருடனும் !

பூவை மாநகர் என்பது எங்கள் ஊரின் பெயர். சரித்திரம் பிரசித்தி பெற்ற ஊர் மாதிரி தோன்றுகிறதல்லவா? பேஷ்! அதுதான் அந்த ஊரின் அதிர்ஷ்டம். ஏன், தெரியுமா? அது ஒரு பட்டிக்காடு

எங்கள் ஊர்ப்பகுதியிலே 'கோமாவரம் கருப்பையா’ என்றால். அழுதப்பிள்ளையும் வாய் மூடும். அழாத பிள்ளை என்றால், உடனே அழத் தொடங்கி விடும். அவன் என்றால், அவ்வளவு பயம்.

சின்னப்பாப்பாவுக்குக் கூட அவனைத்தெரியும் . அதாவது, அவன் பெயர் தெரியும்.

இப்படிப்பட்ட மகிமை கொண்ட அந்தப் புண்ணியவான் யாரென்று தெரிந்தால் ஓட்டம் பிடித்து விடுவீர்கள்,

கதை கேட்க வேண்டுமென்றால் நீங்கள் ஓடிவிடக் கூடாது. அப்போது தான் அழகான இந்தக் கதையைச் சொல்லுவேன்.