பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!



பூவை மாநகர் சின்னஞ்சிறிய கிராமம்தான்

தேசிய உணர்வு மிகுந்த அதன் ஊராட்சித் தலைவரின் பெருமுயற்சியின் விளைவாகக் கிராமத்தின் வடகோடியில் உருவாக்கப் பட்டிருந்த காமராஜர் புரம் ஹரிஜனப் பகுதியிலும், கடந்த சுதந்திரதின விழாவன்று அரசின் ஆரம்பப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பள்ளியின் ஆரம்ப விழாவில் நாட்டின் சுதந்திர நாள் விழாவும் சேர்ந்து கொண்டது.

நாட்டுப் பற்றும் சமுதாயக் கடனும் நிரம்பும் பெற்ற காந்திராமன் பள்ளியின் தலைமை ஆசிரியகராகப் பொறுப்பேற்றதிலிருந்து பள்ளியின் நடைமுறைகளிலே புதிய மலர்ச்சி ஏற்படத் தொடங்கியது.