பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

பூவை எஸ். ஆறுமுகம்

முடியவில்லை. துப்பாக்கியை எடுத்து அவனை ஒரே குண்டினால் சாய்த்து விடத் துடித்தேன்.

அதற்குள் அந்தக் களவாணி என்ன செய்தான், தெரியுமா?-அவன் மறைந்துவிட்டான். எங்கள் பணத்தைக் காப்பாற்றும்படி சற்றுமுன் விநாயகரிடம் நான் பிரார்த்தனை செய்தேன். தேங்காய்ப் பிரார்த்தனை! அந்தத் தேங்காயை உடைத்து நான்தான் தின்பேனாக்கும். ஆனால், இந்தக் கள்ளனோ, ஊரார்பணம் பூராவையும் கொள்ளையடிப்பதற்கு ஐங்கரனின் தயவை ஒசியில் நாடுகிறான்!

பாவம், பிள்ளையார் ஊமையாக இருந்தார். அந்த அப்பாவிக் கடவுளுக்காக அனுதாபப்படுவதோடு நிறுத்திக் கொண்டு வீடு வந்தேன். மூச்சுப் பிடிக்கச் சாப்பிட்டேன். நல்லகாலம் மூச்சு பிடிக்கவில்லை. உடனே போட்டேன் ஒரு தூக்கம்.

அப்பா வெளியூர் சென்றிருந்தார். அவ்வளவு பெரிய வீட்டுக்கு நான்தான் காவல்.

என்னிடம் எந்தத் திருட்டுப் பயல் நெருங்க முடியும்? கைத்துப்பாக்கி தலையணைக்கு அடியில் பத்திரமாக இருந்தது.

அம்மாவுக்கு அடுப்படியில் படுத்தால்தான் தூக்கம் பிடிக்குமாம்!