இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கண்ணாமூச்சி ஆடலாம்!
அந்தத் தெருவில் திருவிழா ஒன்றும் நடக்க வில்லை என்றாலும் திருவிழா பட்டபாடுதான் போங்கள்!
அடடே, போய்விடாதீர்கள்.
நில்லுங்கள் அதோ, பாருங்கள்!
அந்தத் தம்பிதான் வேணு.
அவன்: பழனி.
ஒடி வருகிறானே பொடியன் அவனுக்குப் பெயர் வரதன்.
அதோ டில்லி, குப்புசாமி, ஹரிகரன், இப்ராகிம், ஜோசப், ரவிசங்கர், ராமலிங்கம் கோதண்டம், நாராயணன், துரைராஜ், ராமசாமி!...
சிறுவர் உலகம் விந்தை மிக்கது அல்லவா?
அவர்கள் எல்லோரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட வேண்டுமென்று திட்டமிட்டார்கள்.