பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணாமூச்சி ஆடலாம்!

அந்தத் தெருவில் திருவிழா ஒன்றும் நடக்க வில்லை என்றாலும் திருவிழா பட்டபாடுதான் போங்கள்!

அடடே, போய்விடாதீர்கள்.

நில்லுங்கள் அதோ, பாருங்கள்!

அந்தத் தம்பிதான் வேணு.

அவன்: பழனி.

ஒடி வருகிறானே பொடியன் அவனுக்குப் பெயர் வரதன்.

அதோ டில்லி, குப்புசாமி, ஹரிகரன், இப்ராகிம், ஜோசப், ரவிசங்கர், ராமலிங்கம் கோதண்டம், நாராயணன், துரைராஜ், ராமசாமி!...

சிறுவர் உலகம் விந்தை மிக்கது அல்லவா?

அவர்கள் எல்லோரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட வேண்டுமென்று திட்டமிட்டார்கள்.