பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

பூவை எஸ். ஆறுமுகம்

இக்காட்சியை ரசிக்க பாபு நாயுடு, வரதன் முதலியார், தியாகராஜன், சிவப்பிரகாசம் ராஜ கோபால், சீனிவாசன், வேம்புலி, ஆறுமுகம், வில்லியம்ஸ் ஆகியோர் காத்திருந்தார்கள்.

ஞாயிற்றுக்கிழமைப் பொழுதைக் கழிக்க வேண்டாமா?

காலைப் பொழுது வெகு அற்புதமாக விளங்கியது.

பூவா தலையா போடப்பட்டது. பூ விழுந்தால், முதலில் கண்களில் துணியைக் கட்டிக்கொள்ள வேண்டியது பழனியின் பொறுப்பு என்று திட்டம் உருவானது. விழுந்தது பூ!

சிறுவர்கள் கும்மாளம் கொட்டி ஆரவாரம் முழக்கினர்.

"டே, கோட்டை ஜாக்கிரதையாப் போடு. இல்லாட்டா. அந்த வஞ்சகச் சீனப்பயல்களுக்கும் பாகிஸ்தான் காரர்களுக்கும் உண்டான கதி உனக்கும் நேர்ந்திடப் போவுது. எல்லைக் கோடு விஷயத்திலே ரொம்ப ரொம்ப ஜாக்கிரதை வேனுமாக்கும்" என்றான் வேணு.

"ஆமா...ஆமா” என்று பழனி வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தான்.

எல்லாம் தயார்!