பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபாவளி வேடிக்கை

அந்தத் தீபாவளி வேடிக்கை ரொம்பவும் வேடிக்கையான கதைதான், போங்கள்!

அடடே, போய் விடாதீர்கள்!

நின்று கேளுங்கள்.

கதையைச் சொல்லட்டுமா?

சரி:

தீபாவளிப் பண்டிகை என்றால் சிறுவர்களுக்கும் சிறுமியருக்கும் ஏற்படக்கூடிய மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்? அவரவர் தலைகால் தெரியாத குதூகலத்தில் திளைத்திருந்தார்கள்.அதாவது, தலையையும் காலையும் தெரிந்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்!

அந்த வட்டத்துப் பிள்ளைகள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

அந்த முடிவு என்ன தெரியுமா?