பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

பூவை எஸ் ஆறுமுகம்

அப்போது நடந்த ஒரு கதையைச் சொல்லட்டுமா?

சரி.

அப்போது, எனக்கு வயது என்ன தெரியுமா?

ஊஹூம், வயதைச் சொல்லலாமா?-கூடாது , கூடவே கூடாது!

சினிமாக்காரர்களுக்கு மட்டும்தானா வயதை மறைக்கும் உரிமை உண்டு?

சரி.

அன்று நான், பாலன், அம்புஜம், தங்கப்பன், சுந்தரம் எல்லோரும் ‘சடு குடு’ விளையாடிக் கொண்டிருந்தோம்.

விளையாட்டில் வழக்கம் போல எனக்குத்தான் ஜெயிப்பு, எல்லோரும் அதாவது தோற்றவர்கள் எல்லோரும் என்னைத் தலைமேல் தூக்கி வைத்து ஆடினார்கள். அவர்களை அனுப்பிவிட்டு, நான் என் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அந்தி சந்திப் பொழுது அது. வழியிலிருந்த அரசமரத்துப் பிள்ளையாரப்பனுக்குத் தோப்புக்கரணம் செலுத்த எண்ணினேன். என் கடனை-செலுத்த வேண்டிய கடனைச்-செலுத்திவிட்டு வலம் வந்தேன்.

அது சமயம், நான் ஒரு பயங்கர உருவத்தைக் கண்டேன். அவன்தான் ‘கோமாவரம் கருப்பையா’