பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

களையெல்லாம் மீற வேண்டுமென்று இதுவரை இரு நூற்றுத் தொண்ணூற்று ஒன்பது புலிகளை ‘கடக்’ என்று கடித்துக் கொன்றிருக்கிறேன். இன்னும் முந்நூறு ஆகவில்லை. நல்ல வேளை, இப்பொழுது நீ வந்து அகப்பட்டிருக்கிறாய். உன்னையும் ‘கடக்’ என்று கடித்துக் கொன்று விட்டால் சரியாக முந்நூறு ஆகிவிடும்" என்று கடக்கிட்டி முடக்கிட்டி தனது வாயைத் திறந்து பல்லைக் காட்டிற்று.

புலி பயந்து ஓடியே போய்விட்டது. கழுதையின் பல்லையெல்லாம் பார்க்க அது நிற்கவே இல்லை. தப்பினால் போதும் என்று ஓடிவிட்டது.

‘பசும் புல்லின் மேலிருந்த பேராசையால் உயிருக்கே ஆபத்து வந்துவிடும் போலிருந்தது. நல்ல வேளை, தைரியத்தை இழக்காமல் அறிவைப் பயன்படுத்தித் தப்பினேன். இனி மேல் இவ்வளவு தூரம் வரவே மாட்டேன்’ என்று எண்ணிக்கொண்டே கிழவனுடைய குடிசையை நோக்கி வேகமாகக் கழுதை நடந்தது. அப்பொழுது பின் கால்கள் ‘கடக்கிட்டி முடக்கிட்டி, கடக்கிட்டி முடக்கிட்டி’ என்று சத்தம் செய்வதைக் கேட்க வேண்டுமே!