பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

தூரம் போகக்கூடாது என்பதை மறந்து விட்டேனே!’ என்று கொஞ்சம் கலக்கமடைந்தது. இருந்தாலும், அந்தப் புலியிடமிருந்து எப்படியாவது தப்ப வேண்டும் என்று ஒரு தந்திரம் செய்தது.

உடனே அது குதிரையின் காதில் மெதுவாகச் சொல்லிற்று: “இந்தப் புலியிடமிருந்து உயிர் தப்ப இதுதான் நல்ல வழி. நீ கீழே படுத்துக்கொள். நான் உன் முதுகிலே ஏறிக் கொள்கிறேன். உடனே நீ எழுந்து புலியை நோக்கி முன்னாலே பாய்ந்து செல். அதற்குப் பிறகு மற்றவற்றையெல்லாம் நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று குதிரையிடம் தன் தந்திரத்தை எடுத்துக் கூறிற்று.

குதிரைக்கு ஒரே பயம். அதன் கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன. இருந்தாலும், கழுதையின் பேச்சைக் கேட்காமல் புலியிடமிருந்து உயிர் தப்பமுடியாது என்று எண்ணிக் கீழே படுத்தது. கடக்கிட்டி முடக்கிட்டி அதன் முதுகின் மேல் ஏறிக்கொண்டது.

உடனே குதிரை எழுந்து புலியை நோக்கி வேகமாக முன்னால் பாய்ந்தது. “ஆஹா! நல்ல வேட்டை கிடைத்தது. புலியைத் தின்று பல நாளாயிற்று. இந்தப் புலி இப்போது எனக்குக் கிடைத்தது" என்று கடக்கிட்டி முடக்கிட்டி உரத்த குரலில் கூறிற்று. குதிரையோ முன்னால் பாய்ந்து பாய்ந்து வந்தது. அதனால் புலி பயந்து விட்டது.