37
அவைகளும் முயல், மான், கரடி ஆகியவை போடும் பெரிய இரைச்சலைக் கேட்டன. 'ஆபத்து ஏதாவது இல்லாவிட்டால் இத்தனை விலங்குகளும் ஓடுமா' என்று சிறுத்தைகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. புலிகளுக்கும் அவ்வாறே சந்தேகம் உண்டாயிற்று. அதனால் அவைகளும் கூட்டத்திலே சேர்ந்து கொண்டு பாய்ந்து பாய்ந்து ஓடத் தொடங்கின.
இப்படி இந்த விலங்குகளெல்லாம் அஞ்சி நடுங்கிக் காட்டைச் சுற்றிச் சுற்றிப் பல தடவை ஓடிக்கொண்டிருந்தன. கடக்கிட்டி முடக்கிட்டி அப்பொழுதுதான் பட்டணத்திலிருந்து திரும்பி வந்திருந்தது. பசும்புல் மேய்வதற்காக வெளியே வந்தபோது. அது இந்த விலங்குகளின் ஓட்டத்தைக் கவனித்தது.
விலங்குகளின் முன் அணியில் ஓடிவந்த முயல்களைப் பார்த்துக் கடக்கிட்டி முடக்கிட்டி, "முயல்களே. ஏன் இப்படி ஓடுகிறீர்கள்? பயப்படாமல் கொஞ்சம் நின்று பதில் சொல்லுங்கள்" என்று நிதானமாகக் கேட்டது.
"ஐயோ, பூமி கீழே விழுகிறது. நாங்கள் ஓட்டம் பிடிக்கிறோம்" என்று கூறிவிட்டுக் கொஞ்ச நேரமும் நிற்காமல் முயல்கள் ஓடத் தொடங்கின. அவற்றைத் தொடர்ந்து மற்ற விலங்குகளும் “பூமி விழுகிறது. பூமி விழுகிறது" என்று கூவிக்கொண்டே ஓடின.
மறுபடியும் அந்த விலங்குகள் ஒரு சுற்று வருவதற்குள் கடக்கிட்டி முடக்கிட்டி நிதான