பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

ஜினோவாக்காரர்களுக்குப் பொதுவாகவே குடும்பப் பற்று அதிகம். இதற்குக் கிரீஸ்டாபர் கொலம்பஸ் விதி விலக்கல்ல. அவன் தன் தம்பிமார்களை நம்பிய அளவு, அயலார்களை நம்பவில்லை. தன் கூடப் பிறந்தவர்களிடம் மட்டுமல்லாமல் தன் சிற்றப்பன் மகனிடமும் அவன் நல்ல நம்பிக்கை வைத்திருந்தான்.

கிறிஸ்டாபர் பள்ளிக்குச் சென்ற நாட்கள் மிகக் குறைவு. அவன் ஜினோவா மொழிமட்டும் பேசத் தெரிந்து வைத்திருந்தான். நெடுநாட்கள் வரை எழுதப் படிக்கத் தெரியாமலே யிருந்தான். தற்செயலாக அவன் போர்ச்சுககலுக்குப் போய்ச் சேர்ந்த பிறகு தான் எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டான்.

ஜினோவா நகரிலே மீன் பிடிக்கும் தொழில் மிகப் பரந்தது. வேறு எந்த வேலையும் செய்யாதவர்கள் செய்யக் கூடிய மிக எளிமையான தொழில் மீன் பிடிப்பது தான். மீன் பிடிப்பதற்காகப் பெரிய தோணிகளும் பாய்மரக் கப்பல்களும் இருந்தன; துறைமுகங்களில் அவ்வப்போது இப்படிப்பட்ட கப்பல்களைக் கட்டிக்கொள்வதும் உண்டு.

கிரீஸ்டாபர் கொலம்பசுக்குத் தன் தந்தையின் நெசவுக் கூடம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆகவே, தன் பத்தாவது வயதிலேயே மீன் பிடிக்கும் கப்பல்களில் வேலைக்குச் சேர்ந்துகொண்டான். மீன் பிடிக்கச் செல்லும் கப்பல்களிலும், அயல் நாடுகளுக்குக் கருவாடு ஏற்றிச் செல்லும் கப்பல்களிலும், மத்திய தரைக் கடலில் அவன் பலமுறை நெடுந்தொலை பயணங்கள் சென்றிருக்கிறான். கப்பலில் செல்லாத நாட்களில் அவன் தன் தந்தைக்கு, உதவியாக இருந்திருக்கிறான்.

கிரிஸ்டாபர் தன் பத்தொன்பதாம் வயதில் அஞ்சோ அரசர் இரண்டாம் ரேனி ஓட்டிச் சென்ற சண்டைக் கப்ப-