பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113

கொலம்பஸ் இஸ்பானியோலா நோக்கிச் சென்றான். புதிய தலைநகரமான சாண்டா டோமிங்கோவை நெருங்கி வந்த போது பீட்டாத் தீவில் கப்பல்களை நிறுத்தி நங்கூர மிட்டான். அப்போது சாண்டா டோமிங்கோப் பக்கத்திலிருந்து ஒரு சிறு கப்பல்காரன் கொலம்பஸ் கப்பலை நோக்கிச் சுட்டான். ஆனால், இரு கப்பல்களும் நெருங்கிய பின் கவனித்தால் அந்தக் கப்பலைச் செலுத்தி வந்தவன் அவன் சகோதரன் பார்த்தலோமியாதான் என்று தெரிந்தது பிறகு நான்கு கப்பல்களும் எட்டு நாட்கள் பயணம் செய்து சாண்டா டோமிங்கோவை அடைந்தன.