பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

அந்த ஸ்பானியர்கள் ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்தவர்கள். ரோல்டான் உதவியுடன் பிடித்துவரப்பட்டார்கள். இந்த விவரங்கள் போபடில்லாவுக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தன. கலகக்காரன் ரோல்டான் கொலம்பசின் கையாள் ஆகீட்டான் என்றவுடன் அவன் தன் அதிகாரத்தை உடனே செலுத்தத் தொடங்கினான். இந்த நிகழ்ச்சி பற்றிக் கொலம்பஸ் சதோதரர்கள் கூற்றை அவன் கேட்கவே தயாராயில்லை.

அவன் செய்த முதல் வேலை, ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டதுதான் அடுத்த வேலை. ஆட்சிப் பொறுப்பிலிருந்த கொலம்பசின் சகோதரன் டோன் டீகோவைப் பிடித்துக் கப்பலில் சிறை வைத்ததுதான். கொலம்பசின் அதிகாரத்திற்கு எங்கும் தடையேற்படுத்தினான். தன் ஆட்சியை குடியேற்றவாதிகள் ஏற்றுக் கொள்வதற்காக யாரும் எங்கும் எவ்விதக் கட்டுப்பாடின்றியும் தங்கம் சேர்க்கலாம் என்று அறிக்கையிட்டான். பிறகு, தன்னை வந்து காணும்படி கொலம்பசுக்கே கட்டளை பிறப்பித்தான். கொலம்பஸ் எப்போதுமே அரச ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பவன். போபடில்லா, அரசரும் அரசியும் அதிகாரங் கொடுத்தனுப்பிய ஆள் என்று அறிந்ததும், அவன் கட்டளைக்குக் கீழ்பணிந்து அவனைப் பார்க்க வந்தான், தன்னைப் பார்க்க வந்த கொலம்பசுடன் போபடில்லா, நாட்டு நிலைமை குறித்துப் பேசவில்லை. ஏன் குழப்பும் எப்படிக் குழப்பம் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆராயவில்லை. கொலம்பசைச் சங்கிலிகளால் பிணித்து, நகரத்துச் சிறைச்சாலையிலே அடைத்து வைத்தான்.

படைவீரர்கள் அனைவரும் அப்போது பார்த்த லோமியோ கொலம்பசின் கையில் இருந்தார்கள். அவன்