பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

அகற்றப்பட்ட அந்த விலங்குகளையும் சங்கிலியையும், கொலம்பஸ் தன் அறையிலேயே வைத்திருந்தான். எந்த அரசுக்காகத் தான் உலகஞ்சுற்றி நாடுகள் சேர்த்துக் கொடுத்தானோ அந்த அரசு கொடுத்த அந்தப் பரிசை அவன் பத்திரமாகக் காப்பாற்றி வைத்தான். அதுமட்டுமல்ல, அந்த விலங்கையும் சங்கிலியையும் தான் இறந்தபின் தன்னுடன் சேர்த்தே புதைத்துவிட வேண்டும் என்று தன் குடும்பத்தினருக்குக் கட்டளையும் இட்டிருந்தான்.

அரசரும் அரசியாரும் கொலம்பசை வரவழைத்துக் குற்ற விசாரணை நடத்தவில்லை, அவனிடம் அன்பாகப் பேசி நடந்துபோன செயலுக்காக ஆறுதல் கூறினார்கள். நீதியை நிலைநாட்டுவதாகவும் அவன் இழந்த உரிமைகளையும் அதிகாரங்களையும் திருப்பிக் கொடுப்பதாகவும் வாக்களித்தார்கள். நாட்கள் வாரங்களாயின. வாரங்கள் மாதங்களாயின. எதுவும் நடக்கவில்லை. அவர்களுக்கு எத்தணையோ அரசாங்க அலுவல்கள். கொலம்பஸ் விவகாரமும் இஸ்பானியோலாவும் தானா இன்றியமையாதவை!

எட்டு. மாதங்களுக்குப் பிறகு போபடில்லா திருப்பியழைக்கப் பெற்றான். மீண்டும் கொலம்பசை அனுப்பாமல் ஓவாண்டோ என்பவனை கவர்னராக நியமித்து அனுப்பி வைத்தார்கள். ஓலாண்டோ முப்பது கப்பல்களில் 2500 பேருடன் இஸ்பானியோலாவுக்குப் புறப்பட்டுச் சென்றான். கொலம்பசுக்கு, பெருங்கடல் தளபதி, வைசிராய் என்ற பட்டங்களை வைத்துக்கொள்ளும் உரிமை கொடுத்தார்கள். ஓவாண்டாவின் கப்பல்களில் தன் பிரதிநிதியாக ஒருவனை அனுப்பித் தனக்குரிய பகுதிப் பணத்தை வசூலித்துக் கொள்ளவும் அனுமதித்தார்கள்.

இந்த ஏற்பாடுகளெல்லாம் கொலம்பசுக்கும் பிடிக்கவில்லை. மீண்டும்தான் இந்தியத் தீவுகளுக்குச் செல்ல