பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொலம்பஸ் கதை சுவை மிக்கது. அவன் புதுநாடு கண்டுபிடிக்கப் பட்ட பாடும் அனுபவமும் தொல்லையும் துயரும் மிக்கன. கடைசியில் அவன் முயற்சியின் பயனாக அடைந்த பலனோ ஏமாற்றம் மிக்கது.

கொலம்பஸ் கதை மனத்தை உருக்கும் ஒரு பெருங்கதை (நாவல்) போன்றது. இக்கதையின் மூலம், அவனுடைய அளவற்ற நற்குணங்கள் பலவற்றை நாம் அறிய முடிகிறது.

கொலம்பஸ் அரசபக்தி மிக்கவன், தெய்வபக்தியும், மதப்பற்றும் மிகக்கொண்டவன்; விடாமுயற்சியும் ஊக்கமும் உள்ளவன். மனிதாபிமானமுள்ளவன்: நியாயத்திற்குப் போராடும் நெஞ்சுரம் படைத்தவன்; எத்தகைய துன்பத்திற்கும் கலங்காத இரும்பு மனம் கொண்டவன்.

கொலம்பஸ் கதை உலக அனுபவத்தை மட்டுமல்லாமல், உயர்ந்த இலட்சியங்களையும் உள்ளத்திலே உருவாக்க வல்லது.

புதியன கண்டு பிடிக்கும் ஆர்வ மிக்க கொலம்பஸ் கதை மாணவ உலகத்திற்கும், அறிவுத் தாகம் கொண்டோருக்கும் நல்ல விருந்தாகும்.

இவ்வரலாற்றுக் கதையைத் தமிழில் எழுதித்தந்து வெளியிட உரிமையளித்த திரு. நாரா நாச்சியப்பன் அவர்களுக்கு எங்கள் நன்றி யுரியதாகும்.

மு. சுப்பிரமணியன்

பதிப்பாளர்