பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

ளிடம் உள்ள பொருள்களையும் தாராளமாக எடுத்துக் கொடுத்துவிடுகிறார்கள். எதைக் கேட்டாலும், உடனே கொடுத்துவிடுகிறார்கள். சில மாலுமிகள் சிறிய கண்ணாடிப் பொருள்களைக் கொடுத்துவிட்டு தங்கம் வாங்கினார்கள் அந்த எளிய மக்கள் அந்தக் கண்ணாடித்துண்டுகளை வைர மணிகளைப் பெற்றது போல் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு தங்களிடம் உள்ள தங்கத்தை அப்படியே கொடுத்து விட்டார்கள். இவ்வாறு செய்வது சரியல்ல என்று தடுத்ததுடன், அவர்கள் திருப்தியடையும்படி ஆயிரக்கணக்கான அதிசயப்பொருள்களை வழங்கினேன். அவர்கள் நம்மிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதற்காகவும், பிறகு அவர்களை கிறிஸ்தவர்களாக ஆக்க வேண்டும் என்பதற்காகவும் நான் இவ்வாறு நடந்து கொண்டேன். அவர்களுக்குத் தொழுகை முறைகளோ, மதங்களோபற்றி எதுவும் தெரியாது. எல்லா சக்தியும் வானத்திலிருந்து வருவதாக மட்டும் நம்பினார்கள். எங்களையே வானத்திலிருந்து வந்தவர்கள் என்று எண்ணித் தான் வரவேற்றார்கள். கப்பல்களையோ, உடையுடுத்திய மனிதர்களையோ முன்பின் பார்த்திராததால் தான், நாங்கள் வானத்திலிருந்து வந்தவர்கள் என்று அவர்கள் எண்ணினார்கள்.

முதன் முதலில் நான் இறங்கிய இந்தத் தீவில், சில மக்களைப் பலவந்தமாகப் பிடித்தேன். அவர்கள் அச்சம் அகன்றபின் சைகை மூலமாகப் பேசி ஒருவரை யொருவர் புரிந்து கொண்டோம். அவர்களின் மூலம் நான் அந்தப் பகுதிகளைப்பற்றிக் கேட்டறிந்து கொண்டேன். அவர்கள், வேலைகளுக்கு நன்கு பயன்பட்டார்கள் அவர்களை இன்னும் நான் வைத்திருக்கிறேன். இவ்வளவு பழகிய பிறகும் இன்னும் அவர்கள் நான் வானத்திலிருந்து வந்தவன் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கு போனாலும் அவர்கள் மற்ற குடிமக்களுக்கு என்னை

கொ-5