பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

அன்று முதல், கடல் வழியாகவோ, நில வழியாகவோ, வான் வழியாகவோ பயணம் மேற்கொள்வோர் கிரிஸ் டாபரை வழித்துணே முனிவராகக் கொண்டு வழிபட்டபின், புறப்படுவது வழக்கமாகி விட்டது.

இறைவனகிய கிறிஸ்துவை அக்கரைக்குக் கொண்டு சென்ற கிறிஸ்டாபர் முனிவரைப் போலவே, கிறிஸ்துவ மதத்தைக் கடல் கடந்த காடுகளில் பரவச் செய்ததன் மூலம் கிறிஸ்துவை அக்கரை கொண்டு சேர்த்த கொலம் பசுக்கு, அவனுடைய பெற்றோர்கள் கிரிஸ்டாபர் என்றே பெயர் வைத்தார்கள்.

கொலம்போ அல்லது கொலம்பஸ் என்பது அவனுடைய குடும்பப் பெயர். கிறிஸ்டாபர் என்பதுதான் பெற்றோர்கள் அவனுக்கு இட்ட பெயர். அவர்கள் என்ன காரணத்தினல் அந்த முனிவரின் பெயரை அவனுக்கு இட்டார்களோ தெரியவில்லை. அவனே, தன் பெயருக்கேற்ப, கிறிஸ்துவை அறியாத மக்களிடையே அவரைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காகவே தான் பிறந்திருப்பதாக நினைத்துக்கொண்டான் என்பதுமட்டும் உறுதி!

கிரிஸ்டாபர் கொலம்பஸ் 1451 ஆம் ஆண்டில் ஜினேவா நகரில் பிறந்தான். அவனுடைய தந்தை டொமினிக்கோ கொலம்போ ஒரு நெசவாளி, கம்பளி நெசவு செய்பவர். அவனுடைய தாய் சூசானாவும் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவள்தான். கிரிஸ்டாபர் கூடப் பிறந்தவர்களில் இளமையிலேயே இறந்தவர்கள் போக மீதியிருந்தவர்கள் மூவர். ஒருத்தி தங்கை. அவள் ஒரு பாலடைக்கட்டி விற்பவனைத் திருமணம் செய்துகொண்டு போய்விட்டாள். மிகுந்த இருவரும் தம்பிகள். ஒருவன் பெயர் பார்த்தலோமியோ மற்றொருவன் பெயர் ஜியா கோமா. இவனே ஸ்பானியர்கள் டீகோ என்று அழைத்தார்கள்.