பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98


கிறேன். பொருள் புரிந்தோ-புரியாமலோ, பொதுமக்கள் இவ்வாறு பேசுவது, வழி வழி மரபாய் விட்டது.

மேற்கூறியவற்றால், சைவ சித்தாந்த சமயத்தினர் கூறும் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள்களுள் கடவுளும் உயிரும் உண்மையல்ல; உலகம் ஒன்று மட்டுமே உண்மைப் பொருளாகும் என்பது தெளிவு. இளமையில் ஆழ்ந்த கடவுட் பற்றுடையவனாக இருந்த யான், பிறர் கூறியதைக் கேட்டோ, பிறர் எழுதியதைப் படித்தோ இந்த முடிவுக்கு வரவில்லை; உலக நடைமுறைகளை உற்று நோக்கிப் பல்லாண்டுகள் ஆழ்ந்து சிந்தித்ததனால் ஏற்பட்ட அனுபவ அறிவின் காரணமாகவே இப்போது இம்முடிவுக்கு வந்துள்ளேன்.

இயற்பொருள் வாதம்

உலகம் ஒன்று மட்டுமே உண்மையானது என்னும் கொள்கை புதிய தன்று; பண்டு தொட்டே பலரால் பின் பற்றப்பட்டு வரும் கொள்கையேயாகும். இந்தக் கொள்கையும் ஒரு மதம் போல் கருதப்படுகின்றது; இதற்கு உலோகாயத மதம் எனச் சம்சுகிருதத்திலும், ‘Materialism என ஆங்கிலத்திலும் பெயர்கள் வழங்கு கின்றன. சார்வாகர் என்பவர் இக்கொள்கையைப் பரப்பியதால் இதற்குச் சார்வாகம் (சார்வாக மதம்) என்னும் பெயரும் உண்டு. இதனை இயற் பொருள் வாதம் என அழகு தமிழில் அழைக்கலாம். பொறி புலன்களால் உணரப்படும் இயற்கைப் பொருளாகிய உலகத்தை மட்டுமே ஒத்துக் கொள்வதால், இயற் பொருள் வாதம் என்னும் பெயர் ஏற்புடைத்தே! இந்த உலோகாயத மதத்தின் கொள்கைகளாவன:

காட்சியளவையாக - பிரத்தியட்சமாக அறியப்படுவதே உண்மை. மூல முதற் பொருள்கள் (பூதங்கள்)