பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136


என்று வேண்டி'நடுகல்லைக் கையால் தொழுது வணங்கினாளாம். பாடல் வருக:

களிறு பொரக் கலங்கு கழன்முள்வேலி

அரிதுண் கூவல் அங்குடிச் சீறுார்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது:
விருந்தெதிர் பெறுகதில் யானே; என்ஐயும்
ஓ·········· வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே-(306)


இக்காலத்திலும், செத்துக் கிடக்கும் பிணத்தை நோக்கி, உறவினர்கள், எங்களை நல்லபடியாக வைப் பாயாக’ என்று வேண்டிக் கொள்ளும் செய்தி ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

இவ்வாறு வீர நடுகல் வழிபாடு பற்றிய செய்திகள் இன்னும் பல தமிழ் நூல்களில் கூறப்பட்டுள்ளன. வேறு நாடுகளிலும் இத்தகைய வீரர் வழிபாடு உண்டு. விரிவு அஞ்சி அவற்றை விடுப்பாம். இந்த நடுகல் வழிபாட்டுத் தோற்றமும் கடவுள் பிறந்த வரலாறுகளுள் ஒருவகை யாகும்.

கல்லெடுப்பு

அந்தக் காலத்தில் முகத்திலும் மார்பிலும் புண் ப்ட்டுப் போரில் இறத்தலை உயர்ந்த சாவாக-சிறந்த பேறாகக் கருதினர். போரில் இறந்தவர்களைக் கல் நட்டுக் கடவுளாக்கினர். அரச மரபினரோ, போர் மறவர்களோ போரில் புண்பட்டு இறவாமல் நோய் வாய்ப்பட்டு இறப்பின் அந்த இறப்பு தாழ்வாகக் கருதப் பட்டது. அதனால், போரில் புண்பட்டு இறவாமல் வேறு விதமாய் இறந்தவர்களையும். மார்பில் கத்தியால்