பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12


யாவது போகட்டும்-என வறிதே செல்வது கிடையாது. அங்கு நின்று அதைக் கவனித்துத் தொடர்புடையவரைக் கண்டிப்பது எனது வழக்கம். இந்த வழக்கத்தால் யான் சில எதிர்ப்புகளையும் இழப்புகளையும் பெற்றிருக்கிறேன்.

"நெஞ்சு பொறுக்கு தில்லையே- இந்த

நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்"

என்னும் சுப்பிரமணிய பாரதியார் கூற்றை யான் நடை முறையில் கடைப்பிடித்து வந்தேன். எங்கே சண்டை என்றாலும் அங்கே போய் விலக்கி விடுவேன்- எங்கே தகராறு என்றாலும் அங்கே என்னைப் பார்க்கலாம். தகராறு செய்பவனாக என்னைப் பார்க்க முடியாது-தகராறைத் தீர்த்து வைப்பவனாகவே அங்கு என்னைப் பார்க்கலாம்.

உள்ள முயற்சியின் உருவம்

வயது ஏற ஏற, உடல்நலம் குன்றக் குன்ற, உடலால் ஒன்றும் பணிசெய்ய முடியாமற் போய்விட்டது-உள்ளத்தாலேயே ஏதேனும் செய்ய முடிகின்றது. இத்தகைய உள்ளத்தின் ஊக்க முயற்சியே, இப்போது, “கடவுள் வழிபாட்டு வரலாறு’ என்னும் இந்த நூல் வடிவம் பெறலாயிற்று. இந்நூலில், கடவுள் தோற்றுவிக்கப்பட்ட வரலாறும், கடவுள் வழிபாடு தோன்றிய வரலாறும் பல கோணங்களில் விளக்கப்பெறும். கடவுள் உண்மைப் பொருளா? என்பதும் ஆராயப்பெறும்.