65
(1988) சைவ சித்தாந்தச் சமயக் கொள்கை முழுவ: தையும் அப்படியே ஏற்றுக் கொள்வதற்கில்லை:
உள்ளத்துள் உள்ளமை
கடவுள் உயிர்களின் உள்ளத்துள் உள்ளார்;வேறெங்கும் இல்லை-என்பதாகப் பெரியோர்கள் சிலர் கூறியுள்ளனர். சிலர் கூற்றுகளைக் காண்போம்:
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கோவில் வழிபாடு என்னும் தலைப்பில் பின்வரும் பாடல்களைத் தந்துள்ளார்:
1. கோவில் முழுதும் கண்டேன்-உயர்
கோபுரம் ஏறிக் கண்டேன்
தேவாதி தேவனை யான்-தோழி
தேடியும் கண்டிலனே.
2. தெப்பக் குளம் கண்டேன்- சுற்றித்
தேரோடும் வீதி கண்டேன்
எய்ப்பில் வைப்பாம் அவனைத்-தோழி
ஏழையான் கண்டிலனே.
3. சிற்பச் சிலை கண்டேன்- நல்ல
சித்திர வேலை கண்டேன்
அற்புத மூர்த்தியினைத்-தோழி
அங்கெங்கும் கண்டிலனே.
4. பொன்னும் மணியும் கண்டேன்-வாசம்
பொங்கு பூ மாலை கண்டேன்
என்னப்பன் எம்பிரானைத்-தோழி
இன்னும் யான் கண்டிலனே.