பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


5. தூபம் இடுதல் கண்டேன் தீபம்
      சுற்றி எடுத்தல் கண்டேன்
   ஆபத்தில் காப்பவனைத் தோழி
      அங்கே யான் கண்டிலனே.


6. தில்லைப் பதியும் கண்டேன்-அங்குச்
      சிற்றம் பலமும் கண்டேன்
   கல்லைக் கணிசெய்வோனைத் தோழி
      கண்களால் கண்டிலனே.


7. கண்ணுக்கு இனிய கண்டு-மனத்தைக்
      காட்டில் அலைய விட்டு
   பண்ணிடும் பூசையாலே-தோழி
      பயனொன் றில்லையடி.


8. உள்ளத்தில் உள்ளான் அடி-அது நீ
       உணர வேண்டும் அடி
   உள்ளத்தில் காண்பாய் எனில்-கோவில்
       உள்ளேயும் காண்பாய் அடி.


அடுத்து, இதுபற்றிப் பட்டினத்தார் கூறியிருக்கும் ஒரு பாடலைக் காண்போம்:-


“சொல்லிலும் சொல்லின் முடிவிலும்
          வேதச் சுருதியிலு
மல்லிலு மாசற்ற வாகாயங் தன்னிலு
           மாய்ந்து விட்டோ
சில்லிலு மன்ப ரிடத்திலும்
            ஈசனிருக்கு மிடம்
கல்லிலும் செம்பிலுமோ இருப்பான்
           எங்கள் கண்ணுதலே?”

-பட்டினத்தார் பாடல் - பொது-6