பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


தனியே இருந்து கொண்டு விரைந்து மாறி மாறிச் செயல்படுவதாக இதற்குப் பொருள் இல்லை; அட்டாவதானமாகிய எட்டுத் துண்டல் துலங்கல்களும், தசாவதானமாகிய பத்துத் தூண்டல் துலங்கல்களும், சோடசாவ தானமாகிய பதினாறு தூண்டல் துலங்கல்களும் உடனுக்குடன் மிகவும் விரைந்து-விரைந்து நடைபெறுகின்றன என்பதே இதற்குப் பொருளாகும். அனைவராலும் இது செய்யவியலாது. ஆற்றல் மிக்க ஒரிருவரே இதனைச் செய்யவியலும். அவர்களும் சில நேரத்தில் தவறிப் போவதுண்டு எனவே, மனம் எனத் தனியாக ஒன்றும் இல்லை; உடற் கூற்றின் ஒருவகை இயக்கமே மன உணர்வாகும்.

மாற்றுக் கொள்கையினர், இன்னும் நிறைவு கொள்ளாமல், மற்றொரு மறுப்பு கூறலாம்; அஃதாவது; மனி தன், படுக்காமல்-துரங்காமல், விழித்துக் கொண்டு செயலாற்றும்போது, பல தூண்டல்கள் இடையிடையே ஏற்பட, அவற்றிற்குத் துலங்கிக் கொண்டிருக்கலாம்என்பதையாவது ஒத்துக் கொள்ளலாம். ஆனால், அவன், இரவில்-இருளில், தனியறையில், தனியாகப் படுத்துக் கொண் டிருக்கும்பொழுது, நெடு நேரம் தூக்கம் வராமல், எதை எதையோ மணிக் கணக்கில் மாறி மாறி எண்ணிக் கொண் டிருக்கின்றானே-இது எவ்வாறு நிகழ்கிறது? எந்தத் தூண்டலும் அங்கே இல்லாமலேயே, பல எண்ணங்களின் மேல் எவ்வாறு துலங்கிக் கொண்டிருக்கிறான்? எனவே, மனம் என ஒன்று இருந்து கொண்டே அவ்வாறு செய்துகொண்டிருக்கிறது என்பது புலனாக வில்லையா?-என்பதாக, மாற்றுக் கொள்கையினர் வினவலாம். இதற்குப் பதில் வருமாறு :

மூளையில் பல மடிப்புகள் உள்ளன. மனிதன் ஐம் பொறி புலன்களால் அறிந்த செய்திகள் அனைத்தும்.