பக்கம்:கண்ணகிக் கதை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி கதை

21

சோழமன்னன் கரிகாலன்-கரிகாலன்
     சொல்லரிய கோலமுடன்-கோலமுடன் ஆழ்மதிநல் அமைச்சரெல்லாம்-அமைச்சரெல்லாம்
     ஆர்ந்துசூழ வந்தடைந்தான்-வந்தடைந்தான்
வந்தடைந்த மன்னவனை-மன்னவனை
     வாழ்க என் றுவாழ்த்தியிட்டார்-வாழ்த்தியிட்டார்
வந்தனைகள் செய்துநின்றார்-செய்துநின்றார்
     வருகவென்றான் மன்னவனும்-மன்னவனும்
அரங்கேற்றம் தொடங்கிடுவீர்-தொடங்கிடுவீர்
     அமைச்சர்களே! அழைத்திடுமின்-அழைத்திடுமின்
சிரங்கொள்ளும் கட்டளையை-கட்டளையை
     சித்திராபதி அறிந்திட்டாள்-அறிந்திட்டாள்


இசை வேறு


தாமரைக் குளமென விளங்குதையா
     தக்கவர் சூழ்கலை மண்டபமையா
காமரைப் போலங்கு இருந்தனரையா
     கற்றவர் நற்றவர் பல்லோர்களையா அவையினர் கண்களோ அன்றலர்தாமரை
     என் றியம் பும்படி இலங்கினவையா - நவையற்ற அன்னம்போல் வந்தனளையா
     நங்கைபொன் மாதவி மங்கையுமையா தேவமா தோவென வியந்தனரையா
     திருமகள் மாதவியைக் கண்டவரையா தேவர்போல் இமையாது இருந்தனரையா
     திடுமென முழவொலி கேட்டனரையா யாழிசை குழலிசை முழவிசைஎல்லாம்
     இன்னிசை யாகவே முழங்கினவையா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/20&oldid=1306783" இலிருந்து மீள்விக்கப்பட்டது